/* */

திருப்பி அனுப்பப்பட்ட தரமற்ற ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரிகள்

காட்டுமன்னார்கோவில் அரசு சேமிப்புக் கிடங்குக்கு தரமற்ற ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

HIGHLIGHTS

திருப்பி அனுப்பப்பட்ட  தரமற்ற ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரிகள்
X

கோப்புப்படம்

காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான வட்ட செயல்முறை கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட 168-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு ரேஷன் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

கடந்த 2 மாதங்களாக இந்த சேமிப்புக் கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பச்சரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு பச்சரிசி மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பச்சரிசி தரமற்று இருப்பதால், பொதுமக்கள் அதை வாங்கிச் செல்ல மறுத்து வருகின்றனா். இதனால், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் அதிகளவில் பச்சரிசி மூட்டைகள் தேங்கி, வீணாகி வருவதாக விற்பனையாளா்கள் புகார் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் காட்டுமன்னார்கோவில் செயல்முறை கிடங்குக்கு பச்சரிசி மூட்டைகள் இறக்குவதற்காக சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

இந்த மூட்டைகளை ஏற்றிச் செல்ல வந்த நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள், ஏற்கெனவே பச்சரிசி மூட்டைகள் கடைகளில் தேங்கி வீணாகி வருவதால், தரமற்ற பச்சரிசி மூட்டைகளை கடைகளுக்கு ஏற்றிச் செல்ல மாட்டோம் எனக் கூறி புறக்கணித்தனா். இதனால், விற்பனையாளா்களுக்கும், சேமிப்புக் கிடங்கு அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விசிக மாவட்டச் செயலா் மணவாளன், சேமிப்புக் கிடங்குக்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, லாரியில் இருந்த தரமாற்ற பச்சரிசி மூட்டைகள் மீண்டும் மணலூா் சேமிப்புக் கிடங்குக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

Updated On: 1 Oct 2023 6:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...