/* */

ஸ்ரீமுஷ்ணம் அருகே மளிகை கடையில் பாமாயில் திருடிய 2 பெண்கள் கைது

ஸ்ரீமுஷ்ணம் அருகே மளிகை கடையில் 20 லிட்டர் பாமாயில் திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் வெங்கடேசன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்,

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்த கற்பகம், கல்பனா ஆகிய இருவரும் மளிகை சாமான் வாங்க வந்து நீண்ட நேரம் ஆகியும் எந்த ஒரு பொருளையும் வாங்காமல் பாவனை செய்து செய்துகொண்டிருந்தனர்.

இதனை கடையில் வேலை பார்த்த பெண்கள் கவனித்த நிலையில் பாமாயில் எண்ணெயை கட்ட பையில் வைத்து மறைத்து ஆட்டோவில் ஏறி புறப்படும்போது பணிப்பெண்கள் அவரது ஆட்டோவை சுற்றிவளைத்தனர். கூட்டம் அதிகமாகவே இது வேறு ஒரு கடையில் வாங்கியதாக அந்த திருட்டு பெண்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேறு கடையில் வாங்கிய பில்லை காட்டுமாறு கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு வெங்கடேசன் புகார் தெரிவித்தார் தகவலறிந்த ஆய்வாளர் பாண்டிச்செல்வி உத்தரவின்பேரில் துணை ஆய்வாளர் சுபிக்ஷா மற்றும் பார்த்திபன் மற்ற காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் இவர்கள் ஆண்டிமடம் விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது இவர் மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தன. தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

Updated On: 27 Feb 2022 11:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!