/* */

கடலூர் மாவட்டத்தில் இறால் பண்ணைகளை அகற்ற இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

இறால் பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி இளைஞர்கள் கடலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் இறால் பண்ணைகளை அகற்ற இளைஞர்கள் கலெக்டரிடம்  மனு
X

இறால் பண்ணைகளை அகற்றக்கோரி இளைஞர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டையை அடுத்த பு.மடுவங்கரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மடுவங்கரை கிராமத்தின் கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக 15க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கழிவுகள் புகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த போதிலும் அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறையும் பின்பற்றாமல் புதிதாக இறால் பண்ணைகளை அமைத்துள்ளனர். இதனால் விவசாய விளை நிலங்களில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி கொண்டிருக்கிறது.

இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Updated On: 4 Oct 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!