/* */

மேகதாது அணை விவகாரம்: சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சி ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

மேகதாது அணை விவகாரம்: சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சி ஆர்ப்பாட்டம்
X

தமிழர் நீதிக் கட்சி தலைவர் சுப. இளவரசன்

கர்நாடகா மேகதாது அணை திட்டத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் தலைவர் சுப. இளவரசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுப இளவரசன் பேசுகையில், கர்நாடக அரசு அணை கட்டினால் முதல் அணுகுண்டாக நான் இருப்பேன் அதை சுக்குநூறாக உடைத்து எறிவேன் என்று கூறினார்.

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசை வஞ்சிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவருமே பெற்ற தாய் தந்தை போல் மதிக்க வேண்டும். நதிநீர் பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது,கர்நாடக அரசு தமிழர்களை மதிப்பதே கிடையாது. எனவே மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகக் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கர்நாடக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 19 Aug 2021 3:37 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்