/* */

சிதம்பரம் மந்தக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றப்பட்டது

HIGHLIGHTS

சிதம்பரம் மந்தக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஏராளமானவர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறி அவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு மாற்று இடம் தருவதோடு, காலஅவகாசமும் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏராளமானவர்கள் தாங்களே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் அகற்றப்படாத வீடுகளை சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் மின் கண்காணிப்பாளர் சலீம், நகரமைப்பு பொறுப்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 17 March 2022 12:04 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...