சிதம்பரம் மந்தக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் மந்தக்கரை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X
சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றப்பட்டது

சிதம்பரம் மந்தக்கரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரைப்பகுதியை ஏராளமானவர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறி அவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு மாற்று இடம் தருவதோடு, காலஅவகாசமும் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏராளமானவர்கள் தாங்களே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் அகற்றப்படாத வீடுகளை சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் மின் கண்காணிப்பாளர் சலீம், நகரமைப்பு பொறுப்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி