/* */

புதுச்சேரி, தெலுங்கானா இரட்டை குழந்தைகள்-தமிழிசை

புதுச்சேரி, தெலுங்கானா இரட்டை குழந்தைகள்-தமிழிசை
X

புதுச்சேரியும் தெலுங்கானாவும் எனக்கு இரட்டை குழந்தைகள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிதம்பரத்தில் கூறினார்.

தெலுங்கானா மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். இதையடுத்து இன்று காரைக்காலில் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர் பல்வேறு ஆய்வுப் பணிகளை முடித்து விட்டு பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் தீட்சிதர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி அழைத்து சென்றனர்.

தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து உள்ளேன். தடுப்பூசி நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த தடுப்பூசியை எல்லோரும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இணக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

சிதம்பரம் நடராஜர் கோவில் எனது மனதுக்கு இணக்கமானது. அதிக நாள் அரசியலில் இருந்த போது சவாலான சூழலில் நான் இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு இந்த வாய்ப்பை அவர் அளித்திருக்கிறார். புதுச்சேரி, தெலுங்கானா இரண்டுமே எனக்கு இரட்டை குழந்தைகள். இரண்டையும் சரியாக நிர்வகிப்பேன். புதுச்சேரி மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு ஒவ்வொன்றாக சரி செய்வேன் என்று கூறினார்.தொடர்ந்து சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு சென்ற தமிழிசை , அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

Updated On: 22 Feb 2021 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு