இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
X

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் 

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 3510 புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இன்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அத்துடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், காந்தி, கதிர்ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல்பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture