/* */

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மதுரைக்கு திட்டங்களை அறிவித்த முதல்வர்

அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும்; மீனாட்சியம்மன் கோவிலுக்கு 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

HIGHLIGHTS

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மதுரைக்கு திட்டங்களை அறிவித்த முதல்வர்
X

முதல்வர் ஸ்டாலின்  

மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை, சென்னையில் இருந்தவாறே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சங்ககால நகரமான மதுரை, இன்று நவீன மதுரையாக மாறியுள்ளது. இதைச் செய்தது திமுக அரசுதான். மதுரையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், திமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன. மதுரையில் விரைவில், ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

அதேபோல், அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கபடும். மதுரை மத்திய சிறை, புதியதாக மாநகராட்சிக்கு வெளியே அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Updated On: 21 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...