/* */

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

HIGHLIGHTS

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
X

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா. சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.

தொடர்ந்து சிகிச்சை அளித்திட அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து, முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவின் இன்று இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, சிறுமி டானியாவிடம் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் தெரிவித்தார். தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக முதல்வர் ஸ்டாலினிக்கு சிறுமியின் தாய் சௌபாக்கியம் நன்றி தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோரும் உடனிருந்து சிறுமியிடம் நலம் விசாரித்தனர்.

Updated On: 8 Feb 2023 4:54 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது