/* */

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை.. முதல்வர் வழங்கல்....

தமிழகத்தில் பணிபுரியும் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

HIGHLIGHTS

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை.. முதல்வர் வழங்கல்....
X

தமிழகத்தில் பணிபுரியும் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள் வழங்கல், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 177 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் என மொத்தம் 787 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அடையாளமாக 5 ஒப்பந்த செவிலியர்கள். 5 இருட்டறை உதவியாளர்கள், 3 ஆய்வக நுட்புநர் நிலை-II மற்றும் 4 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரிசுந்தரி, உணவுப் பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்:


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 15,409 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் செவிலியர்களின் பணியானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்த பின்னர், நிரந்தர காலிப் பணியிடத்தில் வரிசைப்படி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி தற்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தர பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் 5 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

177 இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்:

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திற்கு 92 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள். என 177 இருட்டறை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் 5 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள்:

உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை. மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவு பகுப்பாய்வகங்களில் காலியாக உள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள்:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குரகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Feb 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  2. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  4. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  6. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  7. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  9. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  10. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!