பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!

பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!
X
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகேபோலன். இவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அதன்படி அவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது இதுவரை 6 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இந்தநிலை8யில் சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 5 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இதேபள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் சிக்கிய நிலையில், ராஜகோபலனை விசாரிப்பதன் மூலம் மேலும் பல பாலியல் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?