மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் கொலை: மர்ம நபர்கள் கைவரிசை

மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் கொலை: மர்ம நபர்கள் கைவரிசை
X

குத்துப்பட்டு இறந்த வாலிபர்.

திருவான்மியூரில் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்தனர். போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை திருவான்மியூர், ரங்கநாதபுரம், பெரியார் நகரை சேர்ந்தவர் விக்கி(எ)விக்னேஷ்வரன்(32), இவர் திருவான்மியூர் ஜெயந்தி சிக்னலில் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை துரத்திச் சென்று முகத்தில் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருவான்மியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட விக்னேஷ் 'சி' பிரிவு சரித்திரபதிவேடு குற்றவாளி அவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலை செய்தது யார் என போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story