/* */

குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய செய்தியாளர் கைது

திருவான்மியூர் அருகே சைக்கிளில் சென்ற பெண் மீது குடிபோதையில் காரை ஒட்டி வந்த செய்தியாளர் மோதியதில் அந்த பெண் உயிரிழந்தார்

HIGHLIGHTS

குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய செய்தியாளர் கைது
X

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜெபர்சன் 

சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகே அதிகாலை 5.15 மணியளவில் குடிபோதையில் காரை இயக்கிய தனியார் தொலைகாட்சி செய்தியாளர் ஜெபர்சன்(32), என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது வீட்டு வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்த வள்ளி(48), என்பவரை இடித்து விட்டு நிற்காமல் தப்பிச் சென்று விட்டார்.

அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியான பெண்ணை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து காரின் பதிவெண்ணை கண்டுபிடித்து செய்தியாளர் வீட்டிற்கே சென்ற போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

சம்பவம் தொடர்பாக அதிவேகமாக வாகத்தை இயக்குவது, குடிபோதையில் வாகனத்தை இயக்கி மரணம் விளைவிப்பது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...