/* */

திருவான்மியூர்: கடன் தொல்லையால் கார் ஓட்டுநர் தற்கொலை

திருவான்மியூரில் கடன் தொல்லையால் கார் ஓட்டுநர் மாமியார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.

HIGHLIGHTS

திருவான்மியூர்: கடன் தொல்லையால் கார் ஓட்டுநர்  தற்கொலை
X

பார்த்திபன்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன், சொந்தமாக கார் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஷாலினி இரண்டாவது பிரவசத்திற்காக திருவான்மியூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பார்த்திபன் வந்துள்ளார். அப்போது குடி பழக்கத்திற்கு அடிமையான பார்த்திபன் குடித்து விட்டு தனது பர்ஸ், பணம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை தொலைத்துவிட்டதால், மனைவி ஷாலினி அவரை திட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பலரிடம் அதிகளவில் கடன் பெற்று திருப்பி கொடுக்காமல் இருந்த பார்த்திபனை கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில், கையில் இருந்த பணமும் தொலைந்ததால், மனமுடைந்த பார்த்திபன் தனது மாமியார் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த திருவான்மியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...