நலச்சங்கத் தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் அளிப்பு
தனது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் வழங்கினார்
HIGHLIGHTS
நலச்சங்கத் தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வி.எஸ்.லிங்கபெருமாள், இவர் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்கத்தினை நடத்தி வருகிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல், வழங்கினார். அதே போல் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி, தென்னங்கன்று கொடுத்தனர்.கோடை வெயிலை தணித்துக் கொள்ள தர்பூசணியும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கினார்..
பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது தான் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும், ஆனால் தனக்கு ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதே மகிழ்ச்சியாக இருக்கும், அதற்காகவே என்னுடைய பிறந்த நாளில் நலதிட்ட உதவிகளையும், அறுசுவை உணவையும் வழங்கி எழை எளியோரின் பசியாற்றி பிறந்தநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாடுவதாக தெரிவித்தார்.