/* */

கிரிக்கெட்: இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய குருநானக்கல்லூரி ஆடவர் அணி

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி

HIGHLIGHTS

கிரிக்கெட்:  இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய குருநானக்கல்லூரி ஆடவர் அணி
X

சென்னையில் அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான டி-20   கிரிக்கெட் போட்டி

இறுதி ஆட்டத்திற்கு குருநானக் ஆடவர் அணி முன்னேறியுள்ளது. நாளை இறுதிப் போட்டி நடக்கிறது..

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான டி-20 கிரிக்கெட் போட்டி 8வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆடவர், மகளிர்களுக்கென போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு என ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் சென்னை முழுவதிலும் இருந்து 10 அணிகளும் கலந்து கொண்டு மோதின.

இதில் இன்று ஆடவர்களுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் காலை குருநானக் கல்லூரியும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மோதின முதலில் பேட் செய்த குருநானக் அணி 20 ஓவருக்கு, 9 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது, பின்னர் விளையாடிய கொங்கு அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. 17 ரன்கள் வித்தியாசத்தில் குருநானக் கல்லூரி வெற்றி பெற்று நாளை நடக்கும் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.

மாலை லயோலா கல்லூரியும், விவேகானந்தா கல்லூரியும் அரையிறுதி போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணியோடு நாளை குருநானக் போட்டியிடும். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு இரண்டிலும் குருநானக் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Updated On: 22 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்