/* */

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!
X

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள், தங்கம், போதை பொருட்கள், அரிய உயிரினங்களை கடத்தி வருகின்றனர். அவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பெர்க் நகரில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்களது சூட்கேசில் 15.6 கிலோ அளவிலான ஹெராயின் போதை பொருளை மறைத்து கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Jun 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’