/* */

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை எம்எல்ஏ ஆய்வு

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் சேதமடைந்த கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை எம்எல்ஏ ஆய்வு
X

திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கல்லூரியில் சேதமடைந்த கல்லூரி கட்டிடங்களை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு பூந்தோட்ட துவக்க பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடங்களில் இந்த கல்லூரி துவக்கப்பட்டது. இந்த கல்லூரி அமைந்துள்ள கட்டிடங்கள் அனைத்தும் 20 ஆண்டுகள் பழமையானவையாகும்.

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் கல்லூரி கட்டிடங்கள் விரிசலடைந்து மிகவும் சேதமடைந்துள்ளன. கல்லூரி அலுவலகம், வகுப்பறைகள் அமைந்துள்ள கட்டிடம் என அனைத்து கட்டிடங்களும் மிகுந்த சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் கல்லூரியில் சேதமடைந்த கல்லூரி கட்டிடங்களை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கல்லூரியின் கட்டிட மற்றும் அடிப்பட்டை தரங்கள் குறித்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கல்லூரி மாணவர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கல்லூரியின் நிலையை கேட்டறிந்து பின்னர் விரைவில் கல்லூரியை முழுவதுமாக தயார் செய்து தருவோம் என உறுதியளித்தார்.

இந்த கல்லூரியை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே ரீட் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் பூப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு திருவொற்றியூர் பூப்பந்தாட்ட சங்கத்தினருக்கு நிதியுதவி வழங்கினார். இந்த ஆய்வின்போது திமுக பகுதி செயலாளர் தனியரசு, கல்லூரி முதல்வர் அரசு ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 7 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்