/* */

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு

சென்னை புளியந்தோப்பில், காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்தவர் வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின.

HIGHLIGHTS

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு
X

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வரதன் வயது 24. இவர் புரசைவாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்து வருகிறார் நேற்றிரவு 11 மணியளவில் இவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டு உள்ளது. எனவே காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு படுத்து தூங்கியுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அவருடைய 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு செல்போன் மற்றும் 18,000 ரூபாய் மதிப்புள்ள மற்றொரு செல்போன், 6000 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு வரதன்தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...