/* */

ஓட்டேரியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை அருகே, ஓட்டேரியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஓட்டேரியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 17வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் 16. இவர் வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் கடந்த 25ஆம் தேதி இரவு 9 மணி அளவில் செல்போனில் பேசியபடி அம்பேத்கர் கல்லூரி சாலை வழியாக, ஜீவா ரயில் நிலையம் அருகே நடந்து செல்லும் போது அங்கு வந்த இரண்டு நபர்கள் விஜயகுமாரை தாக்கி 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து விஜயகுமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஓட்டேரி போலீசார் நேற்று காலை ஓட்டேரி மேம்பாலம் அருகே புளியந்தோப்பு மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது 21 மற்றும் மணலி பகுதியைச் சேர்ந்த ஆசிப் வயது 19 ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுவனை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 Jan 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி