/* */

ஓட்டேரியில் திறந்து இருந்த வீட்டில், உள்ளே நுழைந்து திருடிய பிச்சைக்காரி கைது

பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

HIGHLIGHTS

ஓட்டேரியில் திறந்து இருந்த வீட்டில், உள்ளே நுழைந்து திருடிய பிச்சைக்காரி கைது
X

கைது செய்யப்பட்ட பிச்சைக்கார பெண்.

சென்னை ஓட்டேரி பிரிக்லின் ரோடு 5வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் திலகவதி 32. இவர் புரசைவாக்கம் பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் வீட்டை திறந்து வைத்து விட்டு மாடியில் உள்ள துணிகளை எடுத்து வர சென்று இருந்தார். அப்போது கீழே வந்து பார்த்தபோது பீரோ திறந்து இருந்தது. அப்போது பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதில் வீட்டில் இருந்த 4 சவரன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது இதுகுறித்து திலகவதி ஓட்டேரி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் முனியம்மாள் வயது 40 என்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி தனக்கு தெரிந்த வேறு ஒருவரிடம் கொடுத்து விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 29 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மேலும் முனியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Feb 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  2. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
  4. குமாரபாளையம்
    தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
  5. சிங்காநல்லூர்
    சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராக இருக்கிறார்...
  6. குமாரபாளையம்
    உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி
  7. போளூர்
    போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
  8. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்
  9. ஆரணி
    ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
  10. ஈரோடு
    கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்