/* */

சென்னை விமான நிலையத்தில் கடைகள் அமைக்க இ-டெண்டர்

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் கடைகள் அமைக்க இ-டெண்டர்
X

பைல் படம்.

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் வணிக நிறுவனங்களைத் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டத்தின் உள்ள டி1, டி3, டி4 மற்றும் டி2 பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை (இ-டெண்டர்) 21.02.2022 அன்று சென்னை விமான நிலையம் கோரியுள்ளது.

ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்கள் குறிப்பிட்ட இடத்தில் 6 மாதங்கள் வரை விற்பனை நிலையங்களை அமைக்க முடியும். இது மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

தோல் பொருட்கள், பைகள், அணிகலன்கள், கண் கண்ணாடிப் பொருட்கள், ஆயுர் வேதப் பொருட்கள், நுகர்வோர் மின்னணுப் பொருட்கள், காலணிகள், பொம்மைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகளை அமைக்கலாம்.

ஒப்பந்தப் புள்ளிக்கான விண்ணப்பங்களை 27.02.2023 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://etenders.gov.in/eprocure/app என்ற இ-டெண்டர் இணைய தளத்தையோ அல்லது விமான நிலையங்கள் ஆணையத்தின் www.aai.aero.என்ற இணைய தளத்தையோ பார்க்கலாம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.69.61 லட்சம் மதிப்பிலான 1,387 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவிலிருந்து வந்த பெண் பயணி ஒருவரை இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து எடுத்து வந்த ரூ.28.70 லட்சம் மதிப்பிலான 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில், ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவிலிருந்து வந்த பெண் பயணி ஒருவரை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ரூ.40.90 லட்சம் மதிப்பிலான 815 கிராம் எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் ரூ.69.61 லட்சம் மதிப்பிலான 1,387 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறையின் கூடுதல் ஆணையர் கே.பி.ஜெயகர் தெரிவித்தார்.

Updated On: 22 Feb 2023 2:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!