/* */

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து
X

சைதாப்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியும் காட்சி

சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து திடீரென முன்பக்கத்திலிருந்து புகை வர துவங்கியது.
உடனடியாக கார் ஓட்டுநர் எடிசன்(43), என்பவர் காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு இறங்கி விட்டார். காரின் முன் பகுதி உடனேயே தீப்பிடித்து மளமளவென எரியத் துவங்கியது.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். அதன் பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். காரின் முன் பகுதி மட்டும் முழுவதும் எரிந்து சேதமானது.
இதனால் செல்லம்மா கல்லூரி முதல் சின்னமலை ஏஜி சர்ச் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் காரை அகற்றிய பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
விசாரணையில் கார் வடபழனியில் சர்வீஸ் செய்து விட்டு சின்னமலையில் உள்ள கம்பெனிக்கு எடுத்து சென்ற போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்து குறித்து கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு