/* */

சென்னையில் ரூ.150 கோடியில் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்

சென்னை கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.150 கோடியில் சுமார் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் வசதியை மாநகராட்சி அமைக்கவுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் ரூ.150 கோடியில் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்
X

கோப்பு படம் 

அண்மையில் பெய்த பலத்த மழை, சென்னை நகரை வெள்ளக்காடாக மாற்றியது. மழை நீர் செல்ல உரிய வடிகால் வசதியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.150 கோடியில் சுமார் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் சென்னையின் விரிவாக்கப்பட்ட ராம்நகர், மடிப்பாக்கம், குபேர நகர், ராஜேஷ் நகர், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.1,714 கோடி மதிப்பில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

அதன்படி, கோவளம் வடிநிலப் பகுதியில் உள்ள ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் வெள்ளத்தால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும் கண்ணன் காலனி, நேரு காலனி, நங்கநல்லூர், பி.வி.நகர், இந்து காலனி, நிவாசா நகர், சதாசிவம் நகர், ராம் நகர், குபேந்திரன் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

இங்குள்ள, 139 தெருக்களில் 27.20 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்கள், 95 தெருக்களில் 12.60 கி.மீ. நீளத்துக்கு பழுதடைந்த மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் பணி என, 234 தெருக்களில் 39.80 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படும். இப்பணிக்கு, ஜெர்மன் நாட்டு வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டு, 3 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, ரூ.150.45 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!