/* */

கொள்ளை சம்பவத்தில் கைதானவர் 2014 சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்

சென்னையில் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் கைதானவர் சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது

HIGHLIGHTS

கொள்ளை சம்பவத்தில் கைதானவர் 2014 சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்
X

சென்னையில் மே 5 அன்று ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று நகைக்கடைக்காரரை வழிமறித்து தாக்கி தங்கத்தை கொள்ளையடித்தனர். கடை உரிமையாளரின் புகாரின் பேரில், பெரியமேடு காவல்துறையினர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் வேட்டை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளில் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் நம்பர் பிளேட்டின் உதவியுடன், யாசின் என்பவர் அல்லிக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது கூட்டாளி ரஃபியை கைது செய்தனர்.

ரஃபியிடம் விசாரித்தபோது, 2014ம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் ரஃபி ஒரு சந்தேகநபர் என்றும், அவருக்கு எதிராக ஒரு வருடம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஃபியிடமிருந்து சுமார் 75 கிராம் தங்கம், ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன, பின்னர் அவர் செங்கல்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். அவர் மீது கள்ள நோட்டு மோசடி உட்பட பல வழக்குகள் இருகின்றன.

இந்த கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் மூன்று நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

2014 மே 1ஆம் தேதி பரபரப்பான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர்-குவஹாத்தி ரயிலின் இரண்டு பெட்டிகளில் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு குறைந்த தீவிரம் கொண்ட குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.

Updated On: 22 May 2021 4:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...