/* */

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை புளியந்தோப்பில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 26 )இவருக்கு ஜான் பாஷா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.ஆயிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் ஜான் பாஷா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு ஆயிஷா செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் காலித் பாஷா( 26) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காலித் பாஷாவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு குடிபோதையில் வந்த காலித் பாஷா ஆயிஷாவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் தூங்கி விட்டனர்.அதிகாலை 4 மணியளவில் ஆயிஷா எழுந்து பார்த்தபோது காலித் பாஷா புடவையால் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் காலித் பாஷாவின சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காலித்பாஷாவின் உறவினர்கள் காலித் பாஷாவின் மரணத்திற்கு ஆயிஷா தான் காரணம் அவரை கைது செய்ய வேண்டும் என புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Updated On: 20 Jan 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்