/* */

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சென்னை வியாசர்பாடியில் துணி துவைக்க வாஷிங் மிஷின் ஸ்விட்ச் போட்ட போது, மின்சாரம் தாக்கி பெண்மணி பலியானார்.

HIGHLIGHTS

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
X

சென்னை வியாசர்பாடி அண்ணா நகர் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, வயது ௫௨. இவருக்கு திருமணம் ஆகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். தனது தாய் மற்றும் அண்ணன் உடன் வசித்து வருகிறார். நேற்று காலை 11 மணியளவில், துணி துவைக்க தண்ணீர் கையுடன் சுவிட்ச் போடும்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது அண்ணன் கோவிந்தன் என்பவர் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். அதன் பேரில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவர்கள் லட்சுமியை பரிசோதனை செய்து அவர் வரும்வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!