/* */

கொடுங்கையூரில் இளைஞர்களை தாக்கி செல்போன் பறித்த ரவுடி கைது

கொடுங்கையூரில், விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் செல்போன் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் இளைஞர்களை தாக்கி செல்போன் பறித்த ரவுடி கைது
X

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 22 . இவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் கண்ணதாசன் நகர் 5வது பிளாக் பகுதியில் உள்ள, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர், வினோத் குமார் மற்றும் அவரது நண்பரான ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த அனில்குமார் 21 ஆகிய இருவரையும் அடித்து, அவரிடம் இருந்து 35000 ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். உடனே அருகில் விளையாடியவர்கள் இதுகுறித்து, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் ஓட்டேரி மேட்டுப்பாளையம் 2-வது தெருவைச் சேர்ந்த சாய்வீரா 24 என்ற நபரை கைது செய்தனர். மேலும் மற்றொரு நபரான மதன் என்கின்ற அறுப்பு மதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சாய் வீராவை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு ரவுடியான மதனை தேடி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 6:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...