கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடி கைது

சென்னை வியாசர்பாடி தாமோதரன் நகர் 5வது தெரு வைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 43. இவர் நேற்று காலை வியாசர்பாடி கோல்டன் காம்ப்ளக்ஸ் நான்காவது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பேர் ரவிச்சந்திரனை மடக்கி அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவர் பணம் தர மறுக்கவே அவரை அடித்துள்ளனர் மேலும் அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து சென்றனர். இது குறித்து ரவிச்சந்திரன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் அப்போது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்கின்ற தோல் அஜித் 22 என்ற நபர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று இரவு அவரை வியாசர்பாடி குட்செட் அருகே மடக்கி பிடித்தனர் அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அஜீத்தின் மற்றொரு நண்பர் அருண் என்பவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அஜித் மீது புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் எம்கேபி நகர் வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த 20ஆம் தேதி இவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கைது செய்யப்பட்ட அஜித் மீது வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu