/* */

சென்னை வியாசர்பாடி கடைகளில் மாமூல் வசூல் செய்த ரவுடி கைது

Vyasarpadi Rowdy-சென்னை வியாசர்பாடி கடைகளில் மாமூல் வசூல் செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை வியாசர்பாடி கடைகளில் மாமூல் வசூல் செய்த ரவுடி கைது
X

கைது செய்யப்பட்ட ஜெகநாதன் என்கின்ற ஜனா.

Vyasarpadi Rowdy-சென்னை வியாசர்பாடி பகுதியில் இரவு நேரங்களில் வியாபாரிகளை மிரட்டி ரவுடி ஒருவர் மாமூல் வசூல் செய்து வருவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புகாரின்பேரில் இரவு நேரங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் உள்ள கடைகளை கண்காணித்து வந்த போலீசார், வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் மாமூல் வசூல் செய்யும் போது ரவுடி ஒருவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, வியாசர்பாடி கரிமேடு 2வது தெரு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்கின்ற ஜனா வயது 30 என்பது தெரியவந்தது.

மேலும் இவர் மீது எம்கேபி நகர், வியாசர்பாடி ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களில் சில குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 April 2024 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!