கொடுங்கையூரில் பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது

கொடுங்கையூரில்  பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது
X
கொடுங்கையூரில் வாக்கிங் சென்ற நபரிடம் 2000 ரூபாய் பணம் பறித்த வழக்கில் 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் வயது 46; இவர் நேற்று மாலை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல், பாஸ்கரை அடித்து அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றது. இது குறித்து, பாஸ்கர் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 4 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த பரோட்டா என்கின்ற மணிகண்டன் 19 கொடுங்கையூர் சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் 41. கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பால் சாட்ராஜ் 28. பொன்னேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் 30 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!