/* */

வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி

சென்னை அருகே, வியாசர்பாடியில் பணம் பறித்த் வந்த பிரபல ரவுடி குணா கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியை அச்சுறுத்திய பிரபல ரவுடி குணா கைது: பொதுமக்கள் நிம்மதி
X

ரவுடி குணா

சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி 3வது தெரு சேர்ந்தவர் குமார், வயது 31, இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன் தினம் காலை, வியாசர்பாடி எஸ் ஏ காலனி மூன்றாவது தெரு வழியாக செல்லும்போது, குடிபோதையில் அங்கு வந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்து 1000 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.

இதுகுறித்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தில், குமார் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு சென்று அதே பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில், அந்த நபர் வியாசர்பாடி எஸ் ஏ காலனியைச் சேர்ந்த குணா, வயது 26 என்பதும், அவர் மீது ஏற்கனவே வியாசர்பாடி எம்கேபி நகர், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. ரவுடி குணா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!