/* */

பெரம்பூரில் பீரோவில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகை மாயம்

சென்னை பெரம்பூரில் பீரோவில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகை மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பூரில் பீரோவில் இருந்த ஒன்பது சவரன் தங்க நகை மாயம்
X

சென்னை பெரம்பூர் நட்டால் தோட்டம் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47 ).இவர் பெரம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது மனைவி தாட்சாயணி கர்ப்பமாக உள்ளார். பிரசவத்திற்காக அவர் தனது அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விஜயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி பீரோவில் 9 சவரன் தங்க நகைகளை வைத்து விட்டு அதன் பிறகு தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பீரோவைத் திறந்து பார்க்கும்போது 9 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செம்பியம் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பீரோ கதவு உடைக்கப்படவில்லை வீட்டின் கதவு எதுவும் உடைக்கப்படவில்லை. இருந்தபோதிலும் திருட்டு போயுள்ளது என புகார் அளித்துள்ளார்.

இதனால் போலீசார் அந்த வீட்டில் இருப்பவர்களே யாரேனும் நகைகளை திருடி உள்ளனரா என்ற பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 Jan 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...