வியாசர்பாடி பகுதியில் மதுபானம் மற்றும் குட்கா விற்றவர் கைது
குட்கா, மதுபானம் விற்றதாக கைதானவர்.
தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து, வருவதால் அன்றைய தினம் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனை பயன்படுத்தி சிலர், மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டு அதனை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். போலீசாரும், அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்
அவ்வகையில், வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விறகப்படுவதாக, எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று வியாசர்பாடி ஜெஜெ நகர் 5வது தெரு பகுதியில், ஒரு வீட்டில் திடீரென்று உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, அங்கு சுமார் 30 மதுபாட்டில்கள் மற்றும் 8 கிலோ குட்கா பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்த தமிழ் ராஜ் வயது 44 என்ற நபரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu