/* */

வியாசர்பாடியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது

சென்னை அருகே, வியாசர்பாடியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண் கைது
X

கைதான அஞ்சலை.

சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில், இரவு நேரங்களில் மதுக்கடைகள் மூடிய பின்பு மதுபானம் விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாசர்பாடி தாமோதரன் நகர் 5வது தெரு பகுதியில், நேற்று இரவு எம்கேபி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி விற்கப்படுவதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த அஞ்சலை, வயது 41 என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அஞ்சலை மீது, ஏற்கனவே மதுபானம் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஞ்சலையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எம்கேபி நகர் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...