/* */

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது
X

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கார்த்தி.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், வயது 30 இவர், பேசின்பிரிட்ஜ் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது அறையில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, இரவு 12 மணியளவில் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்

நண்பர்கள் எவ்வளவோ கூறியும் கேட்காமல், தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், கை இரண்டு தோள்பட்டை முழுவதும் காயம் ஏற்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து கார்த்திக்கின் நண்பர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 20 சதவீத தீக்காயங்களுடன் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!