/* */

முடிஞ்சா புடிச்சு பார் என போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சவால்: வாலிபர் கைது

முடிஞ்சா பிடித்து பார் என்று போலீசாருக்கு இன்ஸடாகிராமில் சவால் விட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

முடிஞ்சா புடிச்சு பார் என போலீசாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சவால்: வாலிபர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி

சென்னை செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவள்ளூர் மாவட்டம் கபிலர் தெருவைச் சேர்ந்த ஹரி என்கிற ஹரிகரன் 22. இவன் மீது செம்பியம் பகுதியில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தோஷ் கொலை வழக்கில் தொடர்பு மற்றும் நான்கு வழிப்பறி 2 கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தொடர்ந்து செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஹரிஹரன் வியாபாரிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக செம்பியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து போலீசார் ஹரிஹரனை பிடிக்க அவனைத் தேடி வந்தனர் இந்த தகவல் ரவுடி ஹரிஹரனுக்கு தெரியவர கடந்த அக்டோபர் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரிகரன் முடிஞ்சா புடி என பதிவிட்டிருந்தார் இதனையடுத்து செம்பியம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் பெரம்பூர் ரமணா நகரில் வைத்து ஹரிஹரனை கைது செய்தார்.

தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் ஹரிகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு பரிந்துரை செய்திருந்தார் இதனையடுத்து நேற்று ஹரிகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்

இதனையடுத்து ஹரிகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்ந்து போலீசாருக்கு போக்குக் காட்டி இன்ஸ்டாகிராமில் போலீசாரை கலாய்க்கும் வகையில் பதிவுகளை போட்ட ரவுடி ஹரிஹரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Dec 2021 1:06 PM GMT

Related News