Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகள் கைது
சென்னை கொடுங்கையூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற குள்ளமணி 24. இவர் மீது கொடுங்கையூர் எம்கேபி நகர் வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இதேபோன்று கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் வயது 36. இவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரும் நீதிமன்றத்தில் சில வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.