/* */

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்

சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்
X

சென்னையில் 11 ஆண்டுகளுக்கு பின் கைதான ரவுடி பிரபு.

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வழிப்பறி சம்பவம் ஒன்று நடந்தது. இதில் கொடுங்கையூர் மெட்ரோ வாட்டர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபு என்கின்ற வெள்ள பிரபு(36) ஈடுபட்டிருந்தார். இவர் மீது வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் பிரபு கொடுங்கையூர் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாறி சென்று விட்டார். இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அதுமட்டுமின்றி வியாசர்பாடி பகுதியில் பிரபு மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் பிரபு மீண்டும் கொடுங்கையூர் பகுதிக்கு வருவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று கொடுங்கையூரில் உள்ள வீட்டில் இருக்கும்போது பிரவுவை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Updated On: 5 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!