/* */

மக்களே விழிப்புணர்வு அவசியம்: பெருநகரங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் அதிகபட்ச பாதிப்பு உறுதியானது.

HIGHLIGHTS

மக்களே விழிப்புணர்வு அவசியம்:  பெருநகரங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
X

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4-ஆவது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்.1-ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 1,509-ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை 1,592 என்ற நிலையை எட்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 229 பேருக்கும், சென்னையில் 165 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும், ஈரோட்டில் 104 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 1,607 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 71,378-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,282 பேர் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On: 6 Sep 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா