/* */

பாரிமுனையில் திருமண ஆசைக்காட்டி பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

பாரிமுனை பகுதியில் பெண்ணை திருமண ஆசைக்காட்டி கர்ப்பிணியாக்கியவரை துறைமுகம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாரிமுனையில் திருமண ஆசைக்காட்டி பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது
X

பைல் படம்.

சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்த சுகந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (பெ/25) என்பவர் திருமணமாகி 3 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நவீன்குமார் என்பவர் சுகந்திக்கு அறிமுகமாகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உறவு கொண்டுள்ளார். இதனால் சுகந்தி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளதால், நவீன்குமாரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் நவீன்குமார், சுகந்தியை திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து சுகந்தி, துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, எதிரி நவீன்குமார் (வ/23) பெரும்பாக்கம் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 14 Oct 2021 5:23 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்