/* */

பெரம்பூரில் மன உளைச்சலில் பெண் தற்கொலை

மனஉழைச்சல் காரணமாக பெரம்பூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

பெரம்பூரில் மன உளைச்சலில் பெண் தற்கொலை
X

சென்னை பெரம்பூர் தாமோதரன் தெரு பகுதியை சேர்ந்தவர் சுசிலா. இவரது கணவர் பழனிசாமி இறந்துவிட்டார் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் சுசிலா கடந்த மூன்று வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களை அணுகியும் அவருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சுசிலா வீட்டிலிருந்து கரும்புகைவருவதை பார்த்த ரமேஷ் என்பவர் இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அனைவரும் சென்று கதவை திறந்து பார்த்தபோது உடல்முழுவதும் தீக்காயத்துடன் சுசீலா கருகிய நிலையில் இருந்தார்.

உடனடியாக இது குறித்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் அங்கு வந்த திருவிக நகர் போலீசார் சுசீலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Updated On: 6 Feb 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...