/* */

கொளத்தூர் பிரியாணிக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகள் 2 பேர் கத்தியுடன் கைது

கொளத்தூர் பிரியாணிக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகள் 2 பேரை கத்தியுடன் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொளத்தூர் பிரியாணிக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகள் 2 பேர் கத்தியுடன் கைது
X

கைது செய்யப்பட்ட ரவுடிகள்.

சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தயாநிதி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது உணவகத்திற்கு நேற்று மாலை பிரியாணி சாப்பிட சென்னையை அடுத்த செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சேர்ந்த குமார் என்கிற வாட்டர் வாஷ் குமார் (வயது 31) என்பவரும், பாடியில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கோபிநாத் (வயது25) ஆகிய இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மேலாளர் தயாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நாங்கள் ரவுடிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா என கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் 1500 ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து ஓடினர். மேலும் கடையில் உள்ள டிவி அலங்கார பொருட்களையும் கத்தியால் அடித்து உடைத்து நாசப்படுத்தினர்.

இச்சம்பவத்தை உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அங்கிருந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து உணவக மேலாளர் தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட கொளத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொளத்தூர் போலீஸார் செங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்கின்ற வாட்டர்வாஷ் குமார் மற்றும் பாடியை சேர்ந்த கோபிநாத் ஆகிய இருவரையும் நேற்று இரவு கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இதில் இவர்கள் இருவரின் மீதும் சென்னை புறநகர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் வழக்கு பதிவு செய்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Feb 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்