/* */

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை
X

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சியின் மாநிலச் செயலாளர்கள், மண்டல செயலாளர்களுடன் கமல்ஹாசன் இன்றைய தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறினர். எனவே தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக பாதக அம்சங்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலையில் நிர்வாகிகள் சிலர் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Updated On: 26 Aug 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது