/* */

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இணையதளம் மூலம் கட்டணமில்லா பயண அட்டை பெறும் வசதி துவக்கம்

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இணையதளம் மூலம் கட்டணமில்லா பயண அட்டை பெறும் வசதி துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இணையதளம் மூலம் கட்டணமில்லா பயண அட்டை பெறும் வசதி துவக்கம்
X

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக பயனாளிகள் பெற்றிடும் வகையில் முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

சட்டசபையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் (Internet) வாயிலாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற்றிட வழிவகை செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அவ்வறிவிப்பினை தொடர்ந்து, இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (PTCS) மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இன்று (07.09.2023) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஆண்டுதோறும் 3,237 கண் பார்வை குறையுடையோர்கள், 1,468 மாற்றுத்திறனாளிகள், 1,180 அறிவுசார் குறைபாடுடையோர்கள், 117 சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு உரிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்), தமிழ் வளர்ச்சி இயக்ககம் எழும்பூர் ஆகிய அலுவலர்களின் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வாயிலாக உரிய அலுவலகம் வந்து செல்லாமல், வீட்டின் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற வலைதளம் வாயிலாக விண்ணப்பித்து அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளவும், உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்பு பயண அட்டையை A4 Sheet (white / colour) / பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை அரசு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் (பொ) குணசேகரன், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (P.T.C.S.) மேலாண் இயக்குநர் மூ.அ.முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 7 Sep 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!