/* */

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு

சட்டப் பேரவையில் முதல்வர் உரையின்போது பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு
X

திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு: பிரதமரின் புகாருக்கு தமிழக நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப் பேரவையில் முதல்வர் உரையின்போது பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியின் காணொலி வாயிலான கூட்டத்தில், பெட்ரோல், டீசல் வரியை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகை காணவில்லை என கூறியுள்ளார். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசியிருக்கிறார். மத்திய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை குறைத்தது தமிழக அரசு.8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதா? என பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் உரையை தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 200 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது என்றார்.

Updated On: 28 April 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...