/* */

மழைநீர் வடிகால் அமைப்பில் அதிமுக அரசு ஊழல்:எம்பி தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியால் தான்,சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே இப்போது தண்ணீர் தேங்கியுள்ளது - எம்பி தயாநிதிமாறன்

HIGHLIGHTS

மழைநீர் வடிகால் அமைப்பில் அதிமுக அரசு ஊழல்:எம்பி தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
X

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியால் தான், தற்போதும் சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னை அம்மா மாளிகையில் இன்று நடந்தது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜே.ஜெயராணி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் கூறுகையில், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரவர் பகுதிகளில் முடிவு பெறாமல் உள்ள திட்டங்களை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மத்திய அரசு அளிக்கின்ற நிதி குறித்து ஆராயும் கூட்டமாக இது அமைந்ததாகவும், தற்போது வரை மத்திய அரசு வழங்கிய நிதிகள் உரிய முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் அவல நிலை ஆட்சியால் தான், தற்போது சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். அதன் பிறகு பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் திப் பேடி கூறும்போது, 3 திட்டங்கள் கீழ் சென்னையில் மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அதேபோல் முடிவுபெறாத திட்டங்களை உடனடியாக முடிக்க நடவடிக்கைவும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே, சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் தூறுவாறும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 21 Aug 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது