ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு
X

விஜயகாந்த் பைல் படம்

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடக்க உள்ள ஊராக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை நாளை (16ம் தேதி), நாளை மறுநாள் (17ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future