/* */

எழும்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தீபாவளி கிப்ட் பாக்ஸ்

சென்னை மாநகராட்சி எழும்பூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பூ செலுத்தி கொள்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தீபாவளி கிப்ட் பாக்ஸ் வழங்கினர்.

HIGHLIGHTS

எழும்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு  தீபாவளி கிப்ட் பாக்ஸ்
X

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், தடுப்பூசி அனைவரும் செலத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ஒவ்வொரு சிறப்பு முகாமிலும் பல புதுவகையான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த ராயபுரம் மண்டலத்தில், மாநகராட்சி அதிகாரிகள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தீவிர பணிகளை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் நேற்று 1,600 இடங்களில் 7-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், பொதுமக்களின் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ராயபுரம் மண்டல உதவி சுகாதார அதிகாரி டாக்டர் வேல்முருகன் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ்பாண்டியன் தலைமையில், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

மாநகராட்சியின் இந்த புதுமையான நடவடிக்கை மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. இதனால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வத்துடன் முகாமில் குவிந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் கூறியதாவது:-

ராயபுரத்தில் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இருந்தது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட தொடர் நடவடிக்கையின் மூலம், அங்கு முழுமையாக பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 876 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக இருக்கின்றனர். அதில் 80 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

விரைவில் 100 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மண்டலமாக ராயபுரம் உருவாகும். தடுப்பூசியை மக்களிடையே ஊக்குவிப்பதற்குதான் இது போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 Oct 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...