/* */

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு?

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா  சிகிச்சை கட்டணம் எவ்வளவு?
X

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்னைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான தொகுப்பு வீதம், தற்போதுள்ள தொற்று காலத்தில் மக்கள் நலன் காத்திடவும், கட்டணமில்லா சிகிச்சை வழங்கிடும் வகையிலும் தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வசூலிக்கலாம். அதிதீவிர சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வசூலிக்கலாம்.

ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை வசூலிக்கலாம். செயற்கை சுவாசக் கருவியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம் வசூலிக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவில் உடுருவாத செயற்கை சுவாசக் கருவி வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.3,000 வசூலிக்கலாம்.

கொரோனா சிகிச்சைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணத் தொகை இரண்டு மாதங்களுக்குள் தொற்றின் தன்மைக்தேகற்ப மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் குறித்து 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 23 May 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. இந்தியா
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு